இந்திய- இலங்கைக் கடற்படை கூட்டுப் பயிற்சி- அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து இந்தியாவிற்கு புறப்பட்டது சௌரா!

இந்திய மற்றும் இலங்கை கடற்படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் இந்திய-இலங்கை கூட்டு கடற்படை பயிற்சி நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதனடிப்படையில் இலங்கை கடற்படைக்கு சொந்தமான சௌரா என்ற கப்பல், இந்திய – இலங்கை கூட்டு கடற்படை பயிற்சியான SLINEX – 2024 இல் பங்கேற்பதற்காக அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து இந்தியாவிற்கு புறப்பட்டுள்ளது.

இந்திய – இலங்கை கூட்டுக் கடற்படை பயிற்சியான SLINEX – 2024, இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) முதல் வெள்ளிக்கிழமை (20) வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply