
இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சாரதி ஒருவர் மது போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
அதாவது இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மது அருந்திவிட்டு தெல்தெனியவிலிருந்து கண்டி நோக்கி பஸ்ஸை செலுத்திச் சென்ற சந்தேக நபரான சாரதி வீதியில் பயணித்த தனியார் பஸ் ஒன்றின் பக்கவாட்டு கண்ணாடியை மோதிவிட்டு பஸ்ஸை நிறுத்தாமல் சென்றுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக தனியார் பஸ்ஸின் சாரதியும், நடத்துனரும் தெல்தெனிய பொலிஸாருக்கு முறைப்பாடளித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் பஸ் சாரதி மது அருந்தியமை தெரியவந்துள்ளது. இதனால் சந்தேக நபர் செலுத்திச் சென்ற பஸ்ஸில் இருந்த பயணிகளை கீழே இறக்கிவிட்டு, பஸ் சாரதியை கைது செய்ததுடன் பஸ்ஸை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பஸ் சாரதி பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, அறிவிக்கப்படும் திகதியில் நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.