தாயை தாக்கிவிட்டு தானும் தற்கொலை செய்த மகன்!

தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு மகனும் தற்கொலை.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது, நேற்று (15) கொடகவெல, பிசோகொடுவ பிரதேசத்தில் தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் தனது 82 வயதுடைய தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு மகன் தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த நபர் கல்பாய, பல்லேபெத்த பிரதேசத்தில் வசித்து வந்த 54 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்ற மகன், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் உடவலவ, குருமடயா பிரதேசத்தில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக பிரதேசவாசிகள் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடகவெல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply