
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் வேட்புமனுக்களை நிராகரிப்பதற்கான சட்டத் திருத்த செயல்முறையை ஆரம்பித்துள்ளதாக அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, உள்ளூராட்சி சபைத் தேர்தலின் வேட்புமனுக்களை நிராகரிப்பதற்கான புதிய சட்டத் திருத்தங்களை எதிர்வரும் ஓரிரு வாரங்களில் நாடாளுமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
பழைய வேட்புமனுக்களை நிராகரிப்பதன் மூலம் 2022ஆம் ஆண்டின் பின்னர் புதிதாக இணைக்கப்பட்ட 10 இலட்சம் வாக்களர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.