
புகையிரதத்திற்கு முன்னால் செல்ஃபி எடுக்கச் சென்ற நபர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்றைய தினம் (15) எல்ல ஒன்பது வளைவு புகையிரத பாலத்திற்கு முன் புகையிரதம் வந்து கொண்டிருந்த வேளையில் தனது கையடக்க தொலைபேசியில் செல்ஃபி எடுக்க முற்பட்ட போது, கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் புகையிரதத்தில் மோதுண்டு பலத்த காயமடைந்துள்ளார்.
குறித்த இளைஞன், பலத்த காயமடைந்த நிலையில் தேமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.