
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும், சட்டத்தரணி கௌசல்யாவும் கடந்த 09.12.2024 அன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி உள் நுழைந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாநிதி த.சத்தியமூர்த்தியால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான விசாரணை இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதோ நீதிமன்றம் பிணை வழங்கியது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா மற்றும் சட்டத்தரணி கௌசல்யா ஆகிய இருவரையும் பிணையில் செல்ல யாழ்ப்பாணம் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.