
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதிகளை அண்மித்துள்ள பலசரக்கு கடைகளில் மூவர் அடங்கிய குழுவொன்று திருட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பில் தெரியவருவது, மூவர் அடங்கிய குழு யாழில் உள்ள பலசரக்கு கடைகளுக்கு பொருட்களை வாங்குவது போல சென்று பல பொருட்களை திருடி, தமது ஆடைகளுக்குள் மறைத்து எடுத்து செல்வது அங்குள்ள பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது.
இக்கும்பல் தொடர்ச்சியாக இவ்வாறான திருட்டுக்களில் ஈடுபட்டு வருவதனால், அவர்கள் தொடர்பான தகவல்கள் அறிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.