
யாழில் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 76 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். போதனா வைத்தியசாலையில் 11 பேரும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 28 பேரும் மொத்தமாக 39 பேர் விடுதிகளில் சிகிச்சை பெற்று வருகின்றதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இந்நிலையில், மூன்று நாட்களுக்கு முன்னர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட 23 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.