
மீட்டியாகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு! நான்கு பேர் கைது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது, மீட்டியாகொட, மஹவத்த பிரதேசத்தில் நேற்றிரவு முச்சக்கர வண்டியில் வந்த சிலர், வீடொன்றில் இருந்த ஆண் ஒருவர் மீதும் அவரது மகள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில், மீட்டியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி நேற்று (16) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை போலீசார் முன்னெடுத்துள்ளனர்.