
பதுளை வீதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
45-50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது, பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை பதுளை வீதியில் கோயில் கடைக்கும், பசறை பால் சபைக்கும் இடையே வீதி ஓரமாக குறித்த நபரின் சடலம் காணப்பட்டிருந்தது. மேலும் அவ்விடத்தில் பாதணிகளும்,பை ஒன்றும் அதற்கு அருகாமையில் பை ஒன்றில் 4 யோகட் கோப்பைகளும் காணப்பட்டிருந்தன.
அடையாளம் தெரியாத நபர் இறந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்
பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.