
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பெண் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று (19) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோகந்தர பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் பெண் ஒருவர் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பெண்ணிடமிருந்து 66 kg கேரள கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக கூறப்படும் 5 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பணம் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொட்டாவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.