மலையகத்தில் களமிறங்கும் அர்ச்சுனா!

2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தலை தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் மலையகத்தில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக ராமநாதன் அர்ச்சுனா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட ராமநாதன் அர்ச்சுனா வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள நிலையில், எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மலையக மாவட்டங்களில் களமிறங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply