
எதிமலை பகுதியில் மரை இறைச்சியை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, மொனராகலை, எதிமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொடபாறை பகுதியில் வேட்டையாடுவதற்கு தடை செய்யப்பட்ட மரையின் இறைச்சி என சந்தேகிக்கப்படும் 49 கிலோ இறைச்சியை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எதிமலை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் மூவரும் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26, 30 மற்றும் 36 வயதுடைய மொனராகலை, புத்தல மற்றும் சிறிபுர ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
எதிமலை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.