
ஆசிய அபிவிருத்தி வங்கியால் இலங்கை மின்சார சபைக்கு அங்கீகரிக்கப்பட்ட 150 மில்லியன் டொலர் கடனுதவிக்கான ஒப்பந்தம் இன்று (19) கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த கடன் தொகையை இலங்கை அரசாங்கத்தின் ஊடாக இலங்கை மின்சார சபைக்கு பெற்றுக்கொள்வதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை கடந்த ஒக்டோபர் மாதம் நடாத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் அதற்கான அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்த கடன் தொகை மூலம் நாட்டின் மின்சார அமைப்பின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தி பல அத்தியாவசிய திட்டங்களை மேற்கொள்ள மின்சார சபை திட்டமிட்டுள்ளது.