8,100 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது!

மாவனெல்ல பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவனெல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, மாவனெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிந்தெனிய மயானத்திற்கு அருகில் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22, 24 மற்றும் 25 வயதுடைய மாவனெல்ல பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 8,100 போதை மாத்திரைகள் மற்றும் சந்தேகநபர்கள் பயணித்து வந்த வேன், மோட்டார் சைக்கிள் ஆகியன பொஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, சந்தேகநபர்களில் ஒருவர் கொழும்பில் இருந்து வேன் மூலம் போதைப்பொருளை கொண்டு வந்து மேற்படி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு சந்தேக நபர்களுக்கு விற்பனை செய்ய முற்பட்டுள்ளதாக தெரியந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply