
மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் ஒன்று நேற்று (29) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, காலி – மாத்தறை பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளானது, பாதசாரிகள் கடவைக்காகச் சமிக்ஞை விளக்கிற்கு அருகில் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன்போது, இந்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் பயணித்துள்ள நிலையில் அவர்கள் இருவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, குறித்த விபத்தின் போது காலி மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீப்பரவலை கட்டுப்படுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.