
நுவரெலியாவில் சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொகவந்தலாவை பொலிஸாரால் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நுவரெலியா, பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டியாகல தோட்டப் பகுதியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா, பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.