
அனுராதபுரத்தில் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழையும் பிரச்சினைக்கு தீர்வு கோரி, தந்திரிமலை பிரதான வீதியின் ஓயாமடுவ பகுதியில் இன்று (30) திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
யானைகளால் பயிர்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மக்கள் வீதியை மறித்து பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், போராட்டத்தை கலைக்க பொலிஸார் முயற்சித்த போதிலும் அது தோல்வியுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.