டின் மீன் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குமாறு கோரிக்கை!

டின் மீன் மீது விதிக்கப்பட்டுள்ள வற் வரியை குறைக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை டின் மீன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஷிரான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

டின் மீன்களுக்கு கட்டுப்பாட்டு விலையை விதிப்பது பிரச்சினை இல்லையென்றாலும், டின் மீன் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குமாறு இலங்கை டின் மீன் உற்பத்தியாளர்கள் சங்கம் (CFMASL) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வற் வரி குறைக்கப்படாவிட்டால் உள்நாட்டு மீனவர்கள் பல்வேறு விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ஷிரான் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் இணக்கம் காணப்பட்டதன் பின்னரே டின்மீன்களுக்கான கட்டுப்பாட்டு விலை அமுல்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply