புதிய ஆண்டில் ஜனாதிபதி வௌியிட்ட விடயம்!

புதிய வருடத்தில் புதிய பரிணாமத்திற்கு செல்லவேண்டிய சவால் அரசாங்கத்திற்கு காணப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

“க்ளீன் ஶ்ரீலங்கா” (தூய்மையான இலங்கை) தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வௌியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசியல் கலாச்சாரத்துடன் புத்தாண்டு ஆரம்பமாகியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, குறித்த சவாலை நிறைவேற்றுவதற்கு முழு அரசியல் அதிகாரமும் துணை நிற்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட அரசாங்கம் கடுமையாக உழைத்து வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இலஞ்சமும் ஊழலும் புற்று நோயாக நாடு முழுவதும் பரவியுள்ளதாக தெரிவித்த அவர், ஊழல் மோசடிகளை நிறுத்துவதற்கு அரசியல் அதிகாரத்தின் தலையீடும், முன்னுதாரணமும் மாத்திரம் போதாது என்றும் தெரிவித்தார்.

அத்தோடு, அரச நிறுவனங்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை சரியாகப் புரிந்து கொண்டு அதற்கான ஆதரவை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply