
சாவகச்சேரியில் கிணற்றிலிருந்து வயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்கப்படுள்ளது.
நேற்று (02) சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராம்புவில் பகுதியில் உள்ள வயல் கிணறொன்றில் இருந்து வயோதிபப் பெண் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வயலுக்கு பசளை இடச் சென்றவர்கள் மேற்படி சடலத்தை கண்ட நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளுக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.