புஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் கையடக்கத் தொலைபேசி மீட்பு!

புஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில், சிறப்பு அதிரடிப்படையின் அதிகாரிகள் குழு சிறைச்சாலையின் சிறப்பு பிரிவில் உள்ள அறையை நேற்று (02) ஆய்வு செய்த போது கையடக்கத் தொலைபேசி, டேட்டா கேபிள், சார்ஜர் மற்றும் சிம் கார்ட் என்பன மீட்க்கப்பட்டதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவிக்கின்றனர்.

கண்டுபிடிக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசியின் உரிமையாளர் யார் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக சிறைச்சாலை கட்டுப்பாட்டு அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply