உள்ளூர் துப்பாக்கியுடன் மஹியங்கனையில் ஒருவர் கைது!

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், இலக்கம் 52 தலங்கமுவ சொரபொர ஜனபதய மஹியங்கனை பகுதியை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரிடம் இருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் மஹியங்கனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply