கட்டுநாயக்கவில் தரையிறங்க வந்த விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன- நடந்தது என்ன?

கட்டுநாயக்கா பிரதேசத்தில் இன்று காலை நிலவிய அடர்ந்த பனிமூட்டம் காரணமாக ஓடுபாதை தெளிவாக தென்படாததால், அங்கு தரையிறங்க வந்த 4 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக,
டுபாயில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL-226 விமானம்,
சீனாவின் குவாங்சோவிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL-881 விமானம்
இந்தியாவின் பெங்களூரில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL-174 விமானம்ஆகியன மத்தள விமான நிலையத்திலும்,
துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து வந்த துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK-730, இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திலும் தரை இறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இன்று காலை 07.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழவுள்ள பகுதியில் நிலவிய அடர்ந்த பனிமூட்டம் படிப்படியாக குறைந்த நிலையில், விமான நிலையத்தின் வழக்கமான செயற்பாடுகள் மீண்டும் தொடங்கியதுடன், வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்ட அனைத்து விமானங்களும் இன்று காலை 09:00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply