
காரைநகர் கடற்பரப்பில் வைத்து தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
படகில் எல்லை தாண்டி வந்ததாக கூறி நாகை மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள், யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மயிலிட்டி துறைமுகத்தில் வைத்து கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டவுள்ளனர்.
கைதானவர்களை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமைமை குறிப்பிடத்தக்கது.