மாடியிலிருந்து விழுந்து 16 வயது சிறுமி பலி!

பொரளையில் உள்ள 24 அடுக்குமாடி குடியிருப்பின் 12 ஆவது மாடியிலிருந்து விழுந்து 16 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொரளை, சர்பன்டைன் வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று (10) இரவு இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த சிறுமி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சிறுமி குறித்த மாடியில் இருந்து குதித்தாரா அல்லது விழுந்தாரா என்பது தெரியவில்லை.

இது தொடர்பான மேலதில விசாரணைகளை பொரளை பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply