
பொரளையில் உள்ள 24 அடுக்குமாடி குடியிருப்பின் 12 ஆவது மாடியிலிருந்து விழுந்து 16 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (10) இரவு இடம்பெற்றது.
பொரளை, சர்பன்டைன் வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதில விசாரணைகளை பொரளை பொலிசார் மேற்கொண்டுவந்த நிலையில், இது தொடர்பான மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த சிறுமி கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுமி கொழும்பில் உள்ள ஒரு முன்னணி மகளிர் பாடசாலையில் 10 ஆம் தரத்தில் படித்து வந்துள்ளார்.
இறந்த சிறுமி சிறிது காலமாக மன அழுத்தம் காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக சிறுமியின் தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தற்போது, சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுயியல் நிறுவனத்தின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.