தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறைச்சாலைகளில் உள்ள இந்துமத கைதிகளை பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனைத்து சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் சிறைக்கைதிகளை பார்வையிடும் விதிமுறைகளுக்கு அமைய நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
