கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில், எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது, பொருளாதார, சமூக, மற்றும் அரசியல் விவகாரங்கள் பல குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், அருகில் உள்ள நாடு என்ற வகையில் பல தசாப்தங்களாக இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தனது நன்றியையும் தெரிவித்திருந்தார்.
மேலும், நமது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை வெற்றி கொண்டு, வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்குத் தேவையான ஆதரவை தொடர்ந்து வழங்குமாறும் இந்திய உயர்ஸ்தானிகரிடம் அவர் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.