மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இன்று (17) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, மின்சாரக் கட்டணங்கள் 20 வீதத்தால் குறைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.
வீட்டுப் பிரிவின் கீழ், 0-30 வரையிலான அலகுகளுக்கான கட்டணம் 6 ரூபாவிலிருந்து 4 ரூபாயாகவும், 31-60 வரையிலான அலகுகளுக்கான கட்டணம் 9 ரூபாயிலிருந்து 6 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. .