கொள்கலன் நெரிசல் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்-இலங்கை சுங்கம்!

துறைமுகத்தில் தற்போது நிலவும் கொள்கலன் நெரிசல் அடுத்த மாதத்தின் மூன்றாவது வாரத்திற்குள் முற்றிலுமாக நீங்கும் என்று இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டிற்கு அதிகளவிலான கொள்கலன்கள் சீனா மற்றும் இந்தியாவிலிருந்து வருகின்றன.

இதில், சீனாவில் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு அங்குள்ள தொழிற்சாலைகளுக்கு ஒரு மாத கால விடுமுறை வழங்கப்படுள்ளதால், ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்தில் இருந்து சீனாவிலிருந்து கொள்கலன் இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பெப்ரவரி மாதம் இரண்டாவது வாரம் வரை நாட்டிற்குள் நுழையும் கொள்கலன்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்படும் என்றும், அந்தக் காலகட்டத்தில் தற்போதுள்ள கொள்கலன் நெரிசல் விரைவில் தீர்க்கப்படும் என்றும் இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply