வரவு செலவுத் திட்டத்தில் அரச சேவை சம்பள உயர்வுக்காக நிதி ஒதுக்கீடு!

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபாவை அரச சேவை சம்பள உயர்வுக்காக ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

தம்புத்தேகம பகுதியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், எதிர்காலத்தில் அரச சேவையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply