
யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக சுகவீனமுற்ற இளைஞன் யாழ். போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (2) உயிரிழந்துள்ளார்.
29 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனையின் போது அதீத போதை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் சிறு குற்ற செயல்களில் ஈடுபட்டமைக்காக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்னரே விடுவிக்கப்பட்டிருந்தார்.
சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் நண்பர்களுடன் இணைந்து போதையை நுகர்ந்த நிலையிலையே, அதீத போதை காரணமாக சுகவீனமேற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.