
வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும் என
பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் இன்று அறிவித்தார்.
அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மனைவி அல்லது கணவர் தவிர வேறு எந்தவொரு விருந்தினர்களையும் அழைத்து வரக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன் பொது வாகன நிறுத்துமிடம் மூடப்படும் எனவும், அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கு மாத்திரமே நாடாளுமன்ற அரங்கம் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.