
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி இணைந்து ‘கதிரை’ சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
தற்போது நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் தனது கட்சி வேட்பாளர்களைத் தயாரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.