
யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணிகளை ஏற்றிச்சென்ற அரச பேருந்தின் சாரதி மீது, முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடுப்பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்கள் சிலர் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இரவு (07) இரவு இடம்பெற்றுள்ளது.
பயணிகளை இறக்குவதற்காக பேருந்தை நிறுத்திய போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனால் பேருத்தில் பயணித்த பயணிகள் நடுவீதியில் நிர்க்கதிக்குள்ளாகினர்.
வாள்வெட்டு தாக்குதலுக்கு உள்ளான சாரதி தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.