
நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களினதும் பேரவைகளில் அங்கம் வகிக்கும் வெளிவாரி உறுப்பினர்களை ராஜினாமா செய்யுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போதைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முதலாவது கூட்டம் கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் தற்போதைய அரசாங்கத்தின் தேசிய கொள்கைக்கு அமைவாக மறுசீரமைப்புக்கு வசதி செய்யும் வகையில், அனைத்து பல்கலைக்கழகங்களினதும் பேரவைகளில் அங்கம் வகிக்கும் வெளிவாரி உறுப்பினர்களை பதவி விலக கோருவதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதன்படி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்ன அனைத்து பல்கலைக்கழக பேரவைகளில் அங்கம் வகிக்கும் வெளிவாரி உறுப்பினர்களையும் தாமாக பதவி விலகுவதாக கடிதங்களை வழங்குமாறு பதிவுத் தபால் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சகல பேரவை உறுப்பினர்களையும் எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னர் தமது பதிலை அனுப்பி வைக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்ன தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.