
பொலிஸ் திணைக்களத்திற்குள் மொத்தம் 139 பொலிஸ் பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.
அதன்படி 105 தலைமை பொலிஸ் கண்காணிப்பாளர்கள் மற்றும் 34 பொலிஸ் பரிசோதர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.
பெப்ரவரி 13 மற்றும் 18 ஆம் திகதிகளில் இரண்டு கட்டங்களாக அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த இடமாற்ற நடவடிக்கைகளுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் அங்கீகாரம் வழங்கப்பட்டு, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.