காதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸாரின் அறிவிப்பு!

மாசி 14ஆம் திகதி உலகளவில் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸார் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வழங்கியுள்ளனர்.

அதன்படி இலங்கை பொலிஸாரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ‘காதலர் தினத்திற்கு முன்’ என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

“நீ ஒரு பெண்ணாக இருந்தால், காதலர் தினத்தன்று, அதனை கொண்டாட பாதுகாப்பற்ற இடங்களுக்குச் செல்வதற்கு முன், உன் பெற்றோர் உனக்குக் கொடுத்த விலைமதிப்பற்ற வாழ்க்கையைப் பற்றி இருமுறை யோசி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இதுபோன்ற சூழ்நிலையில் பெண்கள் ஏதேனும் சிக்கல்களை சந்தித்தால், 109 அவசர தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply