செயலிழந்திருந்த ரயில் கடவை சமிக்ஞை அமைப்பு- விபத்துக்குள்ளான வேன்!

வெலிகம, பெலேன பகுதியில் உள்ள ரயில் கடவையில்,
பெலியத்தையிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த ரஜரட்ட ரயில், வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்து இன்று (14) காலை இடம்பெற்றிருந்தது.

குறித்த ரயில் கடவையில் நிறுவப்பட்ட எச்சரிக்கை மணி மற்றும் ஒளி சமிக்ஞை அமைப்பு செயலிழந்திருந்தமையால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது வேன் பலத்த சேதமடைந்ததோடு, சாரதிக்கும் சிறு காயம் ஏற்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான சேவையில் ஈடுபட்டுவரும் வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகிய போதும், விபத்து நடந்த நேரத்தில் வேனில் சாரதி மட்டுமே இருந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply