
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் செயற்பட்டுவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் “Clean Sri Lanka” வேலைத்திட்டம் இன்று நாடு முழுவதும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி முதலில் கிளிநொச்சி மாவட்டத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் A9 வீதியில் நீதிமன்ற கட்டடம் தொடக்கம் கரடிபோக்கு சந்தி வரை வீதியில் அமைக்கப்பட்டுள்ள பூச்சாடிகளை மீள்புனருத்தானம் செய்வதற்கான பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பணியில் பெருமளவான இளைஞர் மற்றும் யுவதிகள் பங்குபற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.