
பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (15) யாழுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
யாழ் வருகை தந்த யாழ் வருகை தந்துள்ள பிரதமர் முதலில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு விஜயம் செய்து, அதிபருடன் கலந்துரையாடிய அவர் பாடசாலை கல்விச் செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் மாணவர்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி அமரசூரியவை, கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் மீள்புனரமைப்பு செய்யப்பட்டிருந்த நூல் நிலையம் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது கலாசாலை சமூகத்தால் பிரதமருக்கு நினைவுப் பரிசும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் ந.வேதநாயகன், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன் வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக எல்.இளங்கோவன், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான வ.பவானந்தராஜா, ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், கலாசாலையின் விரிவுரையாளர்கள், ஆசிரிய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.