அநுர அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ள சஜித் பிரேமதாச!

தாம் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத புதிய அரசாங்கம், தம்மை விமர்சிப்போரை அச்சுறுத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

களனி பிரதேசத்தில் நேற்று (16) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போதைய அரசாங்கம் எவ்வாறான பொய்களை எல்லாம் கூற முடியுமோ அத்தனையையும் கூறி மக்களை ஏமாற்றியுள்ளது.

மாத்தளை மாவட்டத்தின் யடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கருத்துக்களை முகநூல் ஊடாக வெளிப்படுத்திய போது அரசாங்கத்தையும், மக்கள் விடுதலை முன்னணியையும் சேர்ந்த ஒருவர் அவரின் வீட்டுக்கு சென்று அரசாங்கத்தை விமர்சிப்பதை நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்துள்ளார்.

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத வேளையில், பேச்சு சுதந்திரத்தை மறுக்கும் வகையில் வீடு வீடாகச் செல்கின்ற வேலைத்திட்டத்தை அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வருகின்றது.

அரசியலமைப்பு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தையும், தாம் விரும்பும் அரசியல் கருத்தைக் கொண்டிருப்பதற்கான சுதந்திரத்தையும் வழங்குகிறது. இது இந்த நாட்டில் காணப்படும் அடிப்படை உரிமையாகும். ஆனால் இந்த அரசாங்கம் இதையும் மீறி நடந்து வருகின்றது.

இந்த நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களும் யாருக்கும் அஞ்சாமல் சுதந்திரமாக தமது கருத்துக்களை வெளியிடும் உரிமை உள்ளது. குடி மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் முன்நிற்கும். பேச்சு சுதந்திரமும் கருத்து சுதந்திரமும் என்பது தனிமனித உரிமைகளாகும். அதில் யாரும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் பதிவிட்ட பதிவுகளை நீக்குமாறு யடவத்தை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தமக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறி இளைஞர் ஒருவர் யடவத்தை காவல்நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.

அதன்படி, இன்று (17) இரு தரப்பினரையும் காவல்நிலையத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply