புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட “கணேமுல்ல சஞ்சீவ” என்றும் அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் உடலைப் பெற உறவினர்கள் யாரும் முன்வரவில்லை.
கனேமுல்ல சஞ்சீவ, சுட்டுக்கொல்லப்பட்டு 24 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்ட நிலையில் அவரது உடலைப் பெற உறவினர்கள் யாரும் முன்வரவில்லை.
இதனால் அவரது உடல் கொழும்பு பொலிஸ் பிண அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கைக்காக காத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
