
ஆசிரியர்களுக்கான வருடாந்த இடமாற்றத்தை இந்த மாத இறுதிக்குள் மேற்கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்ட 12,000 ஆசிரியர்கள் இடமாற்றத்தை எதிர்பார்த்துள்ளதாகவும், அதில் பலர் பத்து வருடங்களுக்கு மேலாக ஒரே பாடசாலையில் சேவையாற்றியவர்கள் எனவும் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதில், நீண்ட காலமாக தூரப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் கற்பிப்பவர்களும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நாடளாவிய ரீதியில் ஆசிரியர் சேவையில் முப்பதாயிரம் வெற்றிடங்கள் காணப்படுவதாக அவர் அண்மையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.