சட்டத்தரணிகள் சங்கத்தின் வலியுறுத்தல்!

அண்மைய நாட்களில் பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்த சந்தேகநபர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களால் சட்டத்தின் ஆட்சிக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்களால் சட்ட அமைப்புகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை சிதைவடையும் என்பதால் அவற்றைத் தடுப்பதற்கு பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply