ஆறு மாதத்திற்குள் தையிட்டி விகாரை பிரச்சினைக்கு முடிவு கட்டுவோம்!

ஆறு மாத காலத்திற்குள் தையிட்டி விகாரை பிரச்சினையை தீர்த்து வைப்போம் என சிவசேனை அமைப்பினர் உறுதி அளித்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (24) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் காணி மக்களுக்கே என்பதில் நாம் உறுதியாக இருப்பதுடன், இது தொடர்பாக விகாரை அமையப்பெற்றுள்ள காணி உரிமையாளர்களுடன் நாம் பேசவுள்ளோம் எனவும் தெரிவித்தனர்.

அதன் பின்னர் விகாராதிபதியுடனும், பௌத்த மத தலைவர்களுடனும் பேசி விகாரை தொடர்பான பிரச்சினையை முடிவுறுத்துவோம்.

அதற்கு எமக்கு குறைந்தது 06 மாத காலமாவது வேண்டும். அதற்குள் தமது அரசியலை செய்ய முயன்று அதனை குழப்ப வேண்டாம் என கோருகிறோம் என தெரிவித்தனர்.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply