அர்ச்சுனாவின் முகப்புத்தக பதிவு- பதவி விலகுவாரா எம்.பி!

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தனது பதவியை கௌசல்யா நரேன் என்பவருக்கு விட்டுக் கொடுக்கவுள்ளதாக முகப்புத்தக பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

கடந்த தேர்தலில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அர்ச்சுனா தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

அவர் பதவி விலகுவாராக இருந்தால் அவரது அணியில் போட்டியிட்டு இரண்டாவது அதிக வாக்குகளைப் பெற்ற கௌசல்யாவுக்கு அந்தப் பதவி செல்லும்.

எவ்வாறாயினும் அர்ச்சுனா தனது பதிவில், மறைமுகமாகத் தான் பதவி விலகப்போவதாகக் குறிப்பிட்டுள்ளாரே ஒழிய, நேரடியாக எதனையும் விளக்கவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply