நாடளாவிய பணிப்புறக்கணிப்பு- அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்!

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அவசர மத்திய குழு கூட்டம் இன்று (03) காலை இடம்பெற்றது.

இதன்போது, அரசாங்க வைத்திய அதிகாரிகளின் மேலதிக பணிக்கொடுப்பனவு மற்றும் விடுமுறை கொடுப்பனவு குறைப்பு தொடர்பில் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டது.

இதற்கு அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்காவிட்டால் மார்ச் 5 ஆம் திகதி முதல் நாடளாவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, மார்ச் மாதம் 6 ஆம் திகதிக்குள் இவை திருத்தம் செய்யப்படாவிட்டால், மார்ச் 7 ஆம் திகதி முதல் கடுமையான முடிவுகளை எடுக்க நேரிடும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.

மேலும், “6 ஆம் திகதிக்குள் இந்தத் திருத்தத்தைச் செய்யுங்கள், 7 ஆம் திகதியிலிருந்து நாம் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். 7 ஆம் திகதிக்குப் பிறகு, சுகாதார சேவைகளை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து அரசாங்கம் மீண்டும் ஒருமுறை சிந்திக்க வேண்டியிருக்கும்.” என செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply