
ஹட்டன் செனன் தோட்டத்திற்கு சொந்தமான கே.எம் பிரிவில் உள்ள லயன் தொடர் குடியிருப்பில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் சுமார் 12 வீடுகள் முற்றாக எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்து ஏற்பட மின் கசிவே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ விபத்தில் தோட்ட தொழிலாளர்களின் பொருட்கள் மற்றும் உடமைகள் தீக்கிரையாகிய போதும், எவருக்கும் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட மக்கள் செனன் தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தோட்ட தொழிலாளர்களும், பகுதி மக்களும், ஹட்டன் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.